Tuesday, May 20, 2014


எங்கே தேடுவேன்?




"கான ரீங்காரம் செய்யும் கருவண்டே! நீ தேனூறும் வாயாலே தில்லை நாதனிடம் என் நிலை சொல்லு!" என்ற ஓர் அருமையான பாடலை ஒரு தடவை கேட்கும் சந்தர்ப்பம் வாய்த்தது! 

ஓயாமல் அந்தப் பாட்டின் சில வரிகள் மட்டும் மூளையில், loop ஆகி, ஓடிக் கொண்டே இருக்க, முழுப் பாட்டின் வரிகளுக்காகவும் தவித்தது என் உள்ளம்! 

இன்றுபோல் Internet வசதிகள் இல்லாத காலம் அது! எனவே ‘நெட்’டில் தேடவும் வழியில்லை. (இப்பொழுது மட்டும் என்ன? Net-ல் தேடியும் கூட, அந்தப் பாடல் முற்றாகக் கிடைக்கவில்லை என்பதுதான் உண்மை!) 

எனவே, பாடத் தெரிந்தவர், தெரியாதவர், கண்டவர், காணாதவர், தெருவில் போனவர், போகாதவர், வந்தவர், வாராதவர் என்று கண்ணில் பட்டவர்களிடமெல்லாம், ”இந்தப் பாடலின் முழு வரிகளும், யாருக்காவது தெரியுமா? தெரியுமா?” என்று விடாமல் நச்சரிக்க ஆரம்பித்து, பின் அதுவே என் முழு நேரத் தொழிலாகிப் போனது! 

Monday, May 19, 2014


"Kanne ! Kalai Maane!”




A casual attempt of the song
"Kanne ! Kalai Maane!” (”கண்ணே! கலைமானே!”)
from the Tamil movie Moondraam Pirai, (மூன்றாம் பிறை)
composed by Ilaiyaraja.

While the original song features only a male voice,
here my son Nirmal Natarajan and my daughter Mahima Natarajan
have sung it in parallel!

The voices are recorded separately,
without any intention of merging them together.

But hey, playing them together in Audacity,
it sounded good and different! :)

You can listen to the song below:

(You can directly go to
www.muziboo.com
to listen to the song
”Kanne! Kalaimane!” - "கண்ணே! கலைமானே!")


Friday, May 16, 2014


"தோரணப் பந்தலிலே"


தினம் தினம் வெவ்வேறு சந்தர்ப்பங்களில், வெவ்வேறு வகையான பாடல்களைக் கேட்கிறோம். சில சமயங்களில், அந்தப் பாடல்களின் சரியான அல்லது தெளிவான வரிகள் (Lyrics) கிடைக்காதா என்று தேடுவோம் இல்லையா? எனவே இந்த வலைப்பூவில் அதற்கான முயற்சிகள் அவ்வப்போது எடுக்கப்படும். அந்த வகையில் ஒரு கர்நாடக இசைப் பாடல் இதோ உங்கள் பார்வைக்கு!


பாடல்: தோரணப் பந்தலிலே 
இயற்றியவர்: மதுரை G S மணி
ராகம்: ஹமீர் (ஹிந்துஸ்தானி இசை ராகம்)
தாளம்: ரூபகம்



தோரணப் பந்தலிலே – பாண்டியன்
தோகைக் கயல்விழியின் கல்யாண வைபவமாம்

பூரணமாகவே பல்வகை மணியாரம்
புதுமலர் மாலையுடன் புன்சிரிப்புடன் நின்றாள் (தோரண)

மறை ஓதிட நான்முகனும் அமர்ந்திட
பிறைஅணி இறைவனும் சிறப்புடன் வந்திட

தன்திருக் கரத்தாலே திருமகள் தொழும் மாலே
தங்கையின் மலர்க்கரத்தை சுந்தரன் இடம் வைத்தான்

சந்தன குங்குமம் சேடிகள் தந்திட
வந்த விருந்தினர் சிந்தை மகிழ்ந்திட
”விந்தை! விந்தை!” என தேவ பூதகணம்
வியந்து அறுசுவை உணவு உண்டிட

கண்டிலாத பல சீர்வகை வந்திட
எண்ணிலாத நவரத்னம் குவிந்திட
மண்டலம் புகழ்ந்திட எங்கும் காணாத
மாபெரும் திருநாள் மதுரைத் தலமதில் (தோரண)



You can enjoy the song below:




"கள்வரே! கள்வரே!"




My daughter Mahima Natarajan gave a dance performance
at Saint-Gobain Glass India Ltd.
Samuha 2013 Cultural Competition
for the song "Kalvare! Kalvare!" ("கள்வரே! கள்வரே!")
from the movie "ராவணன்.”

She was awarded the First Prize!


You can watch the "Kalvare! Kalvare!" video below:

Thursday, May 15, 2014


Pondicherry - Give time a break!


This is a brief documentary on Pondicherry (Now: Puducherry), a small town in India which was a French colony before Indian Independence.

Thanks to the Interviewees in this film:

1. Dr. Radja P.
(Head of the Dept. of English, Tagore Arts College, Pondicherry -
A veteran writer in English an Tamil)

2.Puduvai Ra. Rajini
(National Award Winner for Short story -
And he is also my own youngest brother)

Pondicherry - Give time a break...

Script
Photography
Dialogue
Narration
Production

Nirmal Natarajan
(My son)



You can watch the documentary "Pondicherry - Give time a break..." below:


ராகங்கள் பல நூறு



சில கர்னாடக  மற்றும்  ஹிந்துஸ்தானி இசை ராகங்களுக்கு உள்ள
தொடர்புகளைக் கீழே காணலாம்.

கர்னாடக 'கல்யாணி' ராகம் ஹிந்துஸ்தானியில் 'யமன்' என்று கையாளப்படுகிறது. கர்னாடக 'தோடி'தான் ஹிந்துஸ்தானியில் 'பைரவி என்று அழைக்கப்படுகிறது.

அதுபோல, கர்னாடக இசையின்
மோஹனம், ஹிந்துஸ்தானியில் பூபாளி என்றும்,
ஹிந்தோளம் , மால்கௌன்ஸ் என்றும்,
சங்கராபரணம், பிலவால் என்றும்,
சுபபந்துவராளி, தோடி என்றும்,
சக்கரவாகம், ஆகிர் பைரவ் என்றும்,
தேவகாந்தாரி, பீம்ப்ளாஸி என்றும்,
ப்ருந்தாவன சாரங்கா, ஹமீர் என்றும்,
சுத்த சாவேரி, துர்கா என்றும்,
நட பைரவி,   அசாவரி என்றும்,
சஹானா, ஜேஜேவந்தி  என்றும்,
தர்மாவதி, மதுவந்தி என்றும்,
ஹம்சாநந்தி, மார்வா என்றும்,
பந்துவராளி, பூர்வி என்றும்,
மாயாமாளவகௌளை, பைரவ் என்றும்,
ஹரிகாம்போஜி, கமாஜ் என்றும்,
கரஹரப்ரியா,  காபி என்றும்,
கம்பீர நாட்டை, திலங் என்றும்,
வலஜி, கலாவதி என்றும்,
முகாரி, ஜோன்புரி  என்றும்
அழைக்கப்படுகின்றன.

ஆனால், மேற்கண்ட ராகங்களின் ஆரோகண, அவரோகணங்கள், இரண்டு இசைகளிலும் ஏறத்தாழ ஒன்றாக இருந்தாலும், பாடலைப் பிரயோகிக்கும் முறையிலும், கமகப் பிரயோகங்களிலும், பாடும் பாணியிலும், இசையை வெளிப்படுத்தும் விதத்திலும் ஒன்றுக்கொன்று மாறுபடுகின்றன.

சில ராகங்களின் பெயர்கள், இரண்டு இசைகளிலும் ஒன்றாக இருந்தாலும்,
ஒன்றுக்கொன்று துளியும் சம்பந்தமில்லாமல் இருக்கின்ற வினோதத்தையும் காண முடியும்.

எடுத்துக்காட்டாக, தோடி என்ற பெயர் கர்னாடகம், ஹிந்துஸ்தானி என்ற இரண்டிலும் இருந்தாலும், ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாதவை. ஹிந்துஸ்தானி தோடி என்பது, கர்னாடக சுபபந்துவராளிக்குச் சமம் ஆகும். இரண்டு  முறைகளிலும் பைரவி என்ற பெயர் இருந்தாலும், இரண்டும் முரண்பட்டவை. கர்னாடக தோடிக்கும், ஹிந்துஸ்தானி பைரவிக்கும் ஒற்றுமை உண்டு. ஆனால் ஹிந்துஸ்தானி லலித் ராகமும், கர்னாடக லலிதா ராகமும் வேறு வேறானவை.

ஆனால், சில ராகங்கள், இரண்டு இசை முறைகளையும்  பொறுத்த மட்டில், தனித்துவம் பெற்று விளங்குகின்றன.  கர்நாடக இசை ராகங்களான பைரவி, வராளி, சுருட்டி, பேகடா, தன்யாசி, அடாணா, நாயகி, நாட்டக் குறிஞ்சி, கௌளை போன்றவைகளுக்கு மிகச் சமமான ராகங்கள்  ஹிந்துஸ்தானியில்  இல்லை.

அதே போல, ஹிந்துஸ்தானி ராகங்களான  மியான் கீ மல்ஹர், பகாடி, கௌட் சாரங்,  சய நாட், சங்கரா, மரு சிஹாக், ராம்களி, திலக் கமோட் போன்றவைகளுக்குச் சமமான கர்னாடக ராகங்கள் இல்லை.


அசட்டு ராஜா

"கல்கி" பத்திரிக்கைக் குழுமத்தைச் சேர்ந்த
"கோகுலம்" சிறுவர் பத்திரிக்கையில்
(dated 21-01-1973) வெளிவந்தது!


Click on the Page you want to read!



போட்டி

"கல்கி" பத்திரிக்கைக் குழுமத்தைச் சேர்ந்த
"கோகுலம்" சிறுவர் பத்திரிக்கையில்
(dated 15-10-1972) வெளிவந்தது!


Click on the Page you want to read!


Monday, May 12, 2014


ஒரு வார்த்தை பல அர்த்தம்



செய்யுள்:


கரியே! கரிகரிக்கக் கரியுண்டி கரிக்கப்போய்
கரியாலே கரியாகக் கரித்தாயே எனக்கரித்துக்
கரிந்திட்டுக் கரிநிறத்துக் கரிபோலும் கரியான்தன்
கரிணிக்குக் கரியாலே கரிசெய்து கரில்செய்யும்!


”கரி! கரி!” என்று கரித்துக் கொட்டிய இந்தச் செய்யுளின் அர்த்தமாவது: