"கான ரீங்காரம் செய்யும் கருவண்டே! நீ தேனூறும் வாயாலே தில்லை நாதனிடம் என் நிலை சொல்லு!" என்ற ஓர் அருமையான பாடலை ஒரு தடவை கேட்கும் சந்தர்ப்பம் வாய்த்தது!
ஓயாமல் அந்தப் பாட்டின் சில வரிகள் மட்டும் மூளையில், loop ஆகி, ஓடிக் கொண்டே இருக்க, முழுப் பாட்டின் வரிகளுக்காகவும் தவித்தது என் உள்ளம்!
இன்றுபோல் Internet வசதிகள் இல்லாத காலம் அது! எனவே ‘நெட்’டில் தேடவும் வழியில்லை. (இப்பொழுது மட்டும் என்ன? Net-ல் தேடியும் கூட, அந்தப் பாடல் முற்றாகக் கிடைக்கவில்லை என்பதுதான் உண்மை!)
எனவே, பாடத் தெரிந்தவர், தெரியாதவர், கண்டவர், காணாதவர், தெருவில் போனவர், போகாதவர், வந்தவர், வாராதவர் என்று கண்ணில் பட்டவர்களிடமெல்லாம், ”இந்தப் பாடலின் முழு வரிகளும், யாருக்காவது தெரியுமா? தெரியுமா?” என்று விடாமல் நச்சரிக்க ஆரம்பித்து, பின் அதுவே என் முழு நேரத் தொழிலாகிப் போனது!
ஓயாமல் அந்தப் பாட்டின் சில வரிகள் மட்டும் மூளையில், loop ஆகி, ஓடிக் கொண்டே இருக்க, முழுப் பாட்டின் வரிகளுக்காகவும் தவித்தது என் உள்ளம்!
இன்றுபோல் Internet வசதிகள் இல்லாத காலம் அது! எனவே ‘நெட்’டில் தேடவும் வழியில்லை. (இப்பொழுது மட்டும் என்ன? Net-ல் தேடியும் கூட, அந்தப் பாடல் முற்றாகக் கிடைக்கவில்லை என்பதுதான் உண்மை!)
எனவே, பாடத் தெரிந்தவர், தெரியாதவர், கண்டவர், காணாதவர், தெருவில் போனவர், போகாதவர், வந்தவர், வாராதவர் என்று கண்ணில் பட்டவர்களிடமெல்லாம், ”இந்தப் பாடலின் முழு வரிகளும், யாருக்காவது தெரியுமா? தெரியுமா?” என்று விடாமல் நச்சரிக்க ஆரம்பித்து, பின் அதுவே என் முழு நேரத் தொழிலாகிப் போனது!